ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்‌ தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 60ஆயிரத்திற்கும் […]

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் முதன்மையான துறையான வணிகவரித்துறை மூலம் தற்போது வரை 66,000 கோடியில், பதிவுத்துறை மூலம் 8,696 கோடி வருவாய் எட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வணிக வரித்துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத்தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக்கொண்டே வருகிறது. 01.04.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் […]

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

டிஜிலாக்கர் மூலம் உங்கள் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் ஐடி, பாலிசி ஆவணங்கள் போன்ற அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சேமிக்க முடியும். டிஜிலாக்கர் கணக்கில் பதிவு செய்தவுடன், உங்கள் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும். நமது தனிப்பட்ட ஆவணங்களைத் தவறாக வைக்கும் அச்சத்தில் அவற்றை எடுத்துச் செல்ல விரும்பாத போது, டிஜிட்டல் லாக்கர் பயனுள்ளதாக இருக்கும். ஆதார் வைத்திருப்பவர்கள் பிரத்யேக டிஜிலாக்கர் இணையதளம் மற்றும் செயலிக்கான அனுமதி பெற்றிருந்தாலும், அதன் […]

தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கவும், ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் […]

பாலியல் புகார், தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சொந்தமான கைலாச தீவை வாங்கி வசித்து வருவதாக இன்று வரை கூறப்படுகிறது. ஆனால், நித்யானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் கைலாசத்தின் சரியான இடம் தெரியவில்லை. சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக யூடியூப்பில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். […]

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. வரும் 7-ம் தேதி முதல் 27-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழக அரசின்‌ சென்னை, அகில இந்தியக்‌ குடிமைப்பணித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையம்‌, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித்‌ தேர்வு பயிற்சி மையங்கள்‌, கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த இளம்‌ பட்டதாரிகள்‌ மற்றும்‌ முதுநிலை பட்டதாரிகள்‌ ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக்‌ […]

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல எவ்வளவு மழை பெய்யுமோ அந்த அளவிற்கு இயல்பான அளவில் மழை பெய்யும் . பருவமழை காலத்தில் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை […]

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களால் ஏராளமானோர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குகின்றனர். இதனால் விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். ஒரு வேளை அதில் தோல்வியடைந்தால் ஏற்றுக் கொண்டு வெளியேற விரும்புவதில்லை. குறிப்பிட்ட சூதாட்ட செயலிக்கு தங்களை முழு அடிமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏராளமானோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியை நாடுகின்றனர். சிலர் […]

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு உண்மையான விடைத்தாளை காண்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்மா விக்டோரிய என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஜுலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் அந்த மாணவி 196/720 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் […]