கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசின் Fact Check தெரிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மாதம்தோறும் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் பாடங்களில் முதுகலை டிப்ளமா படிப்பு படிக்கலாம் என தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2 ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன. தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் […]
மகாராஷ்டிராவில் இரண்டு மாதங்களில் மொத்தம் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகராந்த் ஜாதவ் வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். ரோஹித் பவார், ஜிதேந்திர அவ்ஹாத், விஜய் வடெட்டிவார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாதவ், மார்ச் 2025 இல் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் 250 தற்கொலைகள் நடந்ததாகக் கூறினார். ஏப்ரல் 2025 இல், மாநிலத்தில் 229 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மார்ச் […]
ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகை செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. இது அனைத்து ரத்த வகைகளுடனும் பொருந்தும் என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்த செயற்கை ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமான ஹீமோகுளோபின் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. […]
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார். அரசின் திட்டங்கள் முறையாக வந்து […]
புதுமைபெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை பெற உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் கல்விக்கு உதவும் வகையில் பட்ட […]
குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நேற்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2025 ரேபிட் & பிளிட்ஸ் போட்டியில் உலக சாம்பியனும், இந்திய வீரருமான டி. குகேஷ் ரேபிட் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். போலந்தின் ஜான்-க்ர்சிஸ்டோஃப் டுடா மற்றும் நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை முந்தி 14 புள்ளிகளுடன் லீடர்போர்டில் முதலிடத்தைப் பிடித்தார். 19 வயதான நடப்பு உலக சாம்பியனான இவர், ஆரம்ப தோல்வியிலிருந்து மீண்டு, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பெற்று, மேக்னஸ் […]
மத்திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்கிய ரூ.5,886 கோடியில் இதுவரை அமைத்த சாலைகள் எத்தனை என தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சி, இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 […]
டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 2வது போட்டியில் சேப்பாக் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2025 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி சோழாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. லீக் போட்டிகளில் தோல்விகளையே சந்திக்காத சேப்பாக் அணி, பிளே ஆஃப் சுற்றில் ஜூலை ஒன்றாம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே […]

