டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது. லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுஞ் சொற்களால் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. […]

மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார். வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் […]

மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் 3வது நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. இதை எதிர்பார்த்திரா வெற்றி என  பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த பாகத்தின் வெளியீடு எப்போது என்பது பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வசூலில் சாதனை படைத்த பாகுபலி , கே.ஜி.எப். […]

சென்னையில் பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாயையும் அவரது இரண்டாவது கணவரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் பானு (28), இவருக்கும் வில்ராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விமல்ராஜும் பானுவும் பிரிந்தனர். தற்போது இரண்டாவது கணவர் ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகின்றார். […]

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி என வழக்கு தொடர்ந்த மாணவியை, தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விடைத்தாளை சரிபார்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். பின்னர், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் […]

திமுக பொதுக்குழு கூட்டம் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், தலைவர் பதவிக்கு முக.ஸ்டாலின் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திராவிட அரசியல் பேரியக்கமான திமுக 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட […]

மகளிர் ஆசிய கோப்பைக்கான டி.20 போட்டியில் மலேசிய அணியுடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றது. மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி.20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதி வெற்றி பெற்ற நிலையில் இன்று மலேசிய அணியுடன் மோதியது. முதல்போட்டியில் மந்தனா , பூஜா, ஸ்னேக் ராணா , ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் விளையாடவில்லை. பதிலாக மேகனா , கிரண் , மேக்னா , […]

தேவர் ஜெயந்தியன்று தங்கக்கவசம் அணிவிக்கும் உரிமைக்கு எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி உரிமை கோரி வருவதால், வங்கி நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கியிருந்தார். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் அதிமுக சார்பில் அந்த தங்கக்கவசம் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு […]

மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால், அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது […]