ஜனவரி 1, 2026 முதல், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ABS மற்றும் இரண்டு BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் கட்டாயமாகும். மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் ஜனவரி 1, 2026 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) புதிய […]

இஎஸ்ஐ-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். 2025 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன்படி உரிமையாளர்கள் தங்களது […]

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். […]

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, தான் கர்ப்பமானதை உறுதிப்படுத்திய 17 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், மருத்துவர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. […]

ஸ்பெயினில் நேற்று இரவு சுமார் 10.43 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. நிலநடுக்கத்துடன், கனமழை மற்றும் வெள்ளமும் சிக்கலை அதிகரித்துள்ளது. ‘ தி லோக்கல் இஎஸ் ‘ அறிக்கையின்படி , ஸ்பெயினில் உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் […]