அக்டோபர் 1 -2023 முதல் கார்களில் எவைஎல்லாம் அவசியமாக இருக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முதலில் பாதுகாப்பு அம்சங்கள் தான் முதன்மையானது பின்னர்தான் எந்த மாதிரியான கார், அதன் ரகம் என்ன என்பதை பார்க்க வேண்டும். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து […]
சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் ரயில்வே நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை […]
பீகாரில் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் எம்.டி.யும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் மாணவியிடம் கூறிய கருத்துக்கு பதில் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவி ஒருவர் பேசும் போது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் கொடுக்க வேண்டும் என அவர் பேசினார். சுகாதாரத்தை பேணிக்காக்கவும் பல கிராம மக்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது இன்றளவும் கடினமாக இருப்பதால் அந்த பெண் […]
ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை ஏவுகணைகள் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஈரான் புரட்சிப்படை, ஈரானின் வடகிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் குர்திஷ் எதிர்ப்பாளர்கள் தற்போது அமையின்மையில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் குற்றம் […]
செயலி மூலமாக அறிமுகமான பெண் ஒருவர் திருமணமான இரவே யாருக்கும் தெரியாமல் பணம் , நகைகளை மூட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள சாணாரப்பட்டி என்னும் இடத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார் . தன்னையும் மகனையும் பார்த்துக் கொள்ள […]
ஜம்முகாஷ்மீரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வர உள்ளார். இந்நிலையில் உதம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டொமைன் சொயில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நடத்துனரும் அவருடைய […]
’’இங்க ஒண்ணும் தேறாது, அடுத்த தடவ வயசான ஆளா பாரு’’ என்ற குறுந்தகவலை வைத்து மனைவியின் தில்லுமுல்லை ரகசியமாக கண்டுபிடித்து போலீசில் கூண்டோடு பிடித்துக்கொடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி , இவர்களுக்கு சரவணன் (35) என்ற மகன் இருக்கின்றார். கைத்தறி நெசவாளரான இவருக்கு பெற்றோர்கள் சம்மதப்படி புரோக்கர் ஒருவர் மூலம் தஞ்சாவூரின் அய்யம்பேட்டையைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணின் […]
அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய 200 லாட்டரி சீட்டுகளிலும் ஜாக்பாட் அடித்து ரூ.8 கோடியை வென்றுள்ளார். அமெரிக்காவின் வர்ஜீனா நகரில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியைச் சேர்ந்தவர் அலிகெமி. இவர் வர்ஜீனியாவின் லாட்டரி டிக்கெட்டுக்களை வாங்கினார். 200 லாட்டரிடிக்கெட்டுகளை வாங்க நினைத்த அவர் ஒவ்வொன்றையும் தனது பிறந்த மாதம் மற்றும் தேதி ஆகியவற்றை வைத்து லாட்டரிகளை தேர்வு செய்தார். மேலும் மாதங்களின் எண்களின் கூட்டுத்தொகை பிறந்த மாதமாக வரும். 0-2-6-5 என்ற கலவையை […]
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக்டோபர் 2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து, மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக்க திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை […]