மாலியில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனை ஒரு ‘வன்முறைச் செயல்’ என்று கூறியது. மேலும், இந்தியர்களை மீட்பதையும், பாதுகாப்பாக நாடு திரும்புவதையும் மாலி உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி, ஆயுதமேந்திய தாக்குதல் குழுவினர் தொழிற்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியபோது, ​​கேயஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த […]

2026 பத்ம விருதுகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரை பரிந்துரை செய்யலாம். 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் […]

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்று கொண்டிருந்தபோது கப்பல் கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 38 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். KMP துனு பிரதாமா ஜெயா என்ற அந்தக் கப்பல், கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு, பாலி ஜலசந்தியில் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் […]

இந்தியாவின் வருமான வரித்துறை, 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை (ITR) தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுமார் 1.65 லட்சம் சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப தயாராக உள்ளது. தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த ITR கணக்குகளில் உள்ள பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்த நோட்டீஸ்களை அனுப்புவதற்கான […]

திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆர்சிபி பௌலர் யாஷ் தயாள் மீது அவரது முன்னாள் காதலில் புகார் அளித்திருந்த நிலையில், இருவருடனான இன்ஸ்டா சாட்டிங் ஸ்கீரின்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். […]

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். […]

சாலையோர உணவுக் கடையில் பெண் ஒருவர், செருப்புகளை பொறித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேலை தேடி வெளியூர் செல்வோர்களில் சிலரது பசியை போக்க அதிகம் கை கொடுப்பது கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள். குறைந்த விலையில் வயிறு நிறைவதால் இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மசாலா மணத்துக்கு பலரும் மனம் மயங்கி […]