உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். […]

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2005 ஆம் ஆண்டு, தனது 15 வயதில் ஆசிய விளையாட்டு போட்டியை வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் அவரது சிறந்த செயல்திறன் ஆகும். சாய்னா தனது வாழ்க்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார், அவற்றில் 2 பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஒன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் […]

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு புதிய விதிமுறைகளை வங்கிகள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன. […]

நீங்கள்புதிய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்போ, சொத்து பதிவு விதிமுறைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலிருந்து, நிலம் வாங்கத் திட்டமிடும் ஒவ்வொருவரும் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலம் அல்லது சொத்தை வாங்கும் போது பதிவு செய்வது ஒரு முக்கியமான சட்ட செயல்முறையாகும், இது சொத்தின் உரிமையை உறுதி செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இந்த […]

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் […]

கோயில்களுக்கு வரக்கூடிய நிதி ஆதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியில் கல்லூரிகள் கட்டாமல், கோயில் நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்? என்று நியாயமான ஒரு கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டிருந்தார். பழனிசாமி, கோயில் நிதியை கல்விக்காக செலவழிக்கக் கூடாது என்கிறார். கல்விக்கு எதிராக […]

ஜார்கண்டில் 800 மதுபான பாட்டில்களில் இருந்த சரக்கை எலிகள் குடித்துவிட்டதாக வர்த்தகர்கள் வினோதமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய மது கொள்கை செப்டம்பர் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் மதுபான கையிருப்பு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்களின் […]

வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90 சதவீதம் சேமிப்பு பணத்தை முன்பணமாக எடுக்கும் வகையில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. இபிஎஃப் திட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 68-BD-ன் படி, வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, வாங்கி வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் […]