கானா அரசு நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக நேற்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் […]

திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. 2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை […]

செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை […]

நவீன உலகத்தின் வசதிகளில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உலகம் முழுவதும் பரவி, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடைவதால் உருவாகின்றன. மேலும், அழகுசாதனப் பொருட்கள், துணிகள் […]

10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டாசயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm. ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும். பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் […]

வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகிய பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்து […]

அரிசியில் ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன, மேலும் இது உணவு விஷத்தை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா பழைய அரிசியில் வேகமாக வளரும். எனவே, அரிசியை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் அரிசி மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் உணவுப் பொருளாகும், இது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சமைக்கப்படுகிறது. அரிசி சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது, ஆனால் சில நேரங்களில் அரிசி ஆரோக்கியத்திற்கும் […]

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில், நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து என டாக்டர் முர்ஹேகர் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் […]

எலிமினேட்டரில் திருச்சியை தோற்கடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, குவாலிஃபையர் 2வது போட்டியில் சேப்பாக்கம் அணியுடன் மோதவுள்ளது. டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை […]