மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதால், ரூ.48,000 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய 6 மாதங்களுக்கான அகில […]

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகால வாழ்க்கையில், லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் பணியாளர்கள் மற்றும் கருவி நியமனங்கள், […]

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி […]

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் […]

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை […]

அதிமுகவிற்கு புதிய மாவட்ட கழக செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (அம்பத்தூர், ஆவடி சட்டமன்றத் தொகுதிகள்) … செஞ்சி சேவல் வி.ஏழுமலை, விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், பி.துரைபாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், (சிதம்பரம். புலாகிரி, […]

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக்டோபர் 15-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு […]

சி.பி.எஸ்.இ. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ’சாதிவெறி ’ தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றது குறித்து சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுமற்றும் வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அமைப்பு வாரியமாக செயல்பட்டுவருகின்றதே தவிற பாடப்புத்தகங்களை வெளியிடுவதில்லை. நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் NCERT என்ற பாடத்திட்டத்தின்படியே 9 முதல் 12ம் வகுப்பு வரை பின்பற்றப்படுகின்றது. மத்திய இடைநிலைக் கல்வி (சி.பி.எஸ்.இ) இது தொடர்பாக டுவிட்டரில் சாதி வெறி என்ற வைரலான கருத்துக்கள் குறித்து […]

சானிடரி நாப்கின்கள் இலவசமாக கேட்ட பெண்ணுக்கு பதில் அளிக்கையில் ’உங்களுக்கு காண்டமும் இலவசமாக வேண்டுமா? ’ என பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஜோத் கவுர் பர்மா என்பவர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார். யுனிசெப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி மற்றும் பட்டறையில் […]

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹவுரா, […]