அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 […]

இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]

சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்புகிறேன் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “பள்ளிக் […]

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் […]

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் […]

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், […]

அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டது. இந்நிலையில், சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணிகளை அதிமுகவின் இதர நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. கதவுகளின் பூட்டுகள் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.37,208-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,129 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,688 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]