சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாசவீடியோக்கள் வெளியான விவகாரத்தில் அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ராணுவீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட ஆபாச வீடியோ வெளியிடப்பட்டதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து ஷிம்ளாவைச் சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4வது நபரை கைது செய்துள்ளனர். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தீவிரவாத நடவடிக்கைகளால் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதி திட்டம் தீட்டியுள்ளதாக தேசிய புலனாய்வுக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் , கேரளா உள்ளிட்ட பல்வேற மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 93 இடங்களில் சோதனை நடத்தியதில் 106 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதனிடையே கேரளாவின்கொச்சியில் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வுக்குழு […]
சிறுமிகளின் ஆபாச படங்கள், போர்ன் வீடியோக்களை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டவர்களை பிடிக்க 20 மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்தியாவில் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. குழந்தைகள் எனவும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. சிறுமிகளுக்கு எதிராக சமூக வலைத்தலங்களில் வீடியோக்கள் பதிவிடுவது, போலியான அக்கவுண்டை பயன்படுத்தி அதில் பெண்களின் ஆபாச […]
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி நாளை ஒரு உற்சாகமான செய்தி அறிவிக்கப்போவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமான செய்தி ஒன்றை நாளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். நாளை மதியம் 2 மணி அளவில் இந்த தகவலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.இதனால் ரசிர்கள் எதற்காக இந்த சஸ்பென்ஸ் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று 2 […]
தேசிய சினிமா தினமான நேற்று ரூ.75க்கு சலுகை விலையில் டிக்கெட் அறிவித்தும் நீங்க வாங்க தவறியிருந்தால். உங்களுக்கு மறுபடியும் அந்த வாய்ப்புகாத்துக்கிட்டு இருக்கு… தேசிய சினிமா தினம் செப்டம்பர் 23 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சினிமா டிக்கெட்ஒன்றின் விலை ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நேற்று கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிந்தது. பொதுவாக வார நாட்களில் குறைவாகவே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் நேற்று வழக்கத்திற்கும்மாறாக கூட்டம் அலைமோதியது. […]
சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அல்லது எஸ்சிஓ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்பெஸ்கிஸ்தானில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடைசியாக காணப்பட்டதார்.. எனினும் அவர், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமான பிஎல்ஏவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது… எனினும், இந்த விவகாரம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு […]
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் இருக்கும் கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (22). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்ட பிரதாப், அவரிடம் நைசாக பேசி பாக்கெட் சாராயத்தை வாங்கி கொடுத்து வீட்டில் மயக்கம் போட வைத்துள்ளார். அதன் பிறகு, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது கடந்த சில காலமாக தொடர்ந்து […]
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹாலிவுட் திரை பிரபலங்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜமௌலியின் திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ராம்சரண் , ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டும் இன்றி ஹாலிவுட் திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகேஷ்பாவுவை வைத்து படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் […]
ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதியில் அமைந்துள்ளது துங்கால் கிராமம். இந்த கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையில் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் ரோட்டில் இருந்த சேற்றில் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் அங்கிதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாலியல் தொழிலுக்கு ரூ.10,000 கூடுதலாக தருவதாகவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பதவிநீக்கம் செய்யப்படும் எனவும் மிரட்டியதாக வாட்சப் தகவல்களில் தெரியவந்துள்ளது. உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட அங்கிதா பந்தாரியின் உடல் மீட்கப்பட்டது. அத்துடன் அவரது செல்போனையும் போலீசார் மீட்டனர். அந்த செல்போன் தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்த செல்போனில் சோதனை செய்தபோது தனது […]