மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயண செலவை ஏற்க தமிழக அரசு முன் வந்துள்ளது. தாய்லாந்தில் ஐடி வேலை வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வடகிழக்கு இங்கிலாந்தில் இருக்கிறது டர்ஹாம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் சுவாரசிய முடிவு இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தாயின் கருவில் உள்ள குழந்தைகள் பல்வேறு உணவின் சுவைகள் மற்றும் வாசனைகளை உணர்ந்து அதனுடைய முக பாவனைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சி. டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 கர்ப்பிணிப் பெண்களிடம் 4டி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளை செய்தனர். இந்த ஆய்வின் […]
காய்ச்சல் பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் பாரதிராஜா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. பிரபல இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைபாடு, நுரையீரல் சளி ஆகிய பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதில் பூரண குணமாகி வீடு திரும்பினார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து […]
ஆதார் அட்டை என்பது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கி, நிதி மற்றும் பல பெரிய விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஆதார் KYC முக்கியமானதாகும். ஆதார் அட்டைக்கான ஆஃப்லைன் KYC செயல்முறையை இந்த செயல்முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை இப்போது இரண்டு படிகளில் முடிக்க முடியும். இதற்காக, பயனர்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP (ஒரு முறை கடவுச்சொல்) மற்றும் ஆதார் எண்ணுடன் இரண்டு காரணி அங்கீகாரம் மூலம் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு […]
தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் […]
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும். நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம். வியாழன் கோளை 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான் நாளை மறுநாள் பூமிக்கு அருகில் […]
மத்தியபிரதேசத்தில் எம்.பி. ஒருவர் தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. சமீபத்தில் இவர் அரசுப் பள்ளிக்கு மரம் நடும் விழாவிற்கு சென்றார். அப்போது பள்ளியில் உள்ள கழிவறையை சோதனை செய்தார். அசுத்தமாக இருந்த கழிவறையை தன் வெறும் கைகளால் அவர் சுத்தம் செய்தார். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கழிவறையை […]
நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, […]
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே இருக்கும் சங்கனாங்குளம் பகுதியில் குடியிருக்கும் ராமையா மகன் சந்திரன்(46). இவர் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தற்போது குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு சந்திரன் மாலை அணிந்து இருக்கிறார். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சங்கனாங்குளம் சுடுகாட்டில் 6 அடிக்கு குழிதோண்டி படுத்து கொண்டு 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து பக்தர் சந்திரன் கூறுகையில், எனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் புற்றுநோய் வியாதி […]