இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,443 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதாவை கர்நாடக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கர்நாடகா அரசு, கட்டாய மத மாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை சட்டமன்றக் குழு கடந்த வாரம் அனுமதித்தது. இந்நிலையில் கட்டாய மதமாற்ற மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. […]

தங்கள் துணையுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்முயற்சி திட்டமாக பஞ்சாப் அரசு அறிமுகம் செய்துள்ளது. பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்: பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு […]

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, ​​இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.இரு சக்கர […]

ஒரு நாளைக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி சமீபத்தில் உலகப்பணக்காரர் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.. இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகளின் விலை அதிகரித்ததால் அவரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை […]

எஸ்பிஐ வங்கி பி.ஒ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் காலியாக ப்ரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12 ஆகும். இதன் மூலம் 1673 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. காலியிட விவரங்கள் […]

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் தங்கி இருப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால் வழக்கத்தை விட இந்த நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் 2 மடங்கு அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.. அந்த […]

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் […]

உத்தரகண்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஒடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரகண்டின் பதேபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இந்நிலையில் பதேபூர் பகுதியில் உள்ள ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இருபுறங்களிலும் தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்கமுடியவில்லை. சாலையைக் கடக்க வந்த இருவர் […]

மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை […]