தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை […]
மருத்துவ உலகம் நீண்ட காலமாக எதிர்நோக்கிய பிரச்சனை முன்பதியில்லாத ரத்த தேவை. இதற்கு தீர்வாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை இரத்தம் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இரத்தம் அனைத்து ரத்த வகைகளுக்கும் பொருத்தமானது என்றும், பரிமாற்றத்திற்கு முன் ABO/Rh வகை பொருத்தம் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்யக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய அளவிலான உற்பத்தி மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சாதனைகள் இருந்தாலும், விரிவான பயன்பாட்டிற்கு இது இன்னும் […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் […]
தூத்துக்குடியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், […]
வெளிநாட்டு நாணய வைப்புகளில் பணத்தை வைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Liberalised Remittance Scheme (LRS) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டின் முடிவில் ஏற்படும் அதிகளவான வெளிநாட்டு நாணய அனுப்புதல்களை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு நாணயத்தில் லாக்-இன் காலத்துடன் கூடிய […]
சென்னையில் உள்ள முருக பக்தர்கள் எளிதில் சென்று வழிபடுவதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த முருகன் கோவில்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்: சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில், கோல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தலம், சமீப காலமாக மிகுந்த புகழ் பெற்றுவருகிறது. செவ்வாய்கிழமைகளில் இக்கோவிலுக்கு சென்று, சொந்த வீடு கட்ட வேண்டி வேண்டிக்கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் அந்த கனவு நனவாகும் […]
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள காத்திருக்கின்றன. ஏற்கனவே, இதற்கான ஆன்சர் கீ ஏற்கனவே வெளியான நிலையில், முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் நீட் தேர்வு முடிவுகள் 2025 வெளியிடும் […]
இன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். 11A என்ற சீட்டில் இருந்த விஸ்வாஸ் என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார். […]

