தொகுதி மறுவரையறை தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என‌ முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பா.ஜ.க. […]

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக […]

உணவுப் பாதுகாப்பு என்பது உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை. உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் […]

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு […]

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 12-ம் தேதி வரை சில இடங்களில் […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார். நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

இந்தியாவை பொறுத்தவரை விவசாய தொழிலில் லாபம் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சூரியசக்தி மின் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்தில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை இல்லாமல் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், சூரியசக்தி மின்சாரம் மூலம் […]

2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]

புராணங்களின்படி, ஆமை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. ஆமை மோதிரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மோதிரங்கள் பொதுவாக வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆனவை. இந்த மோதிரம் வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கி வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணியக்கூடாது. ஆமை மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும்? ஜோதிடத்தின் படி, ஆமை […]