பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]

சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி […]

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் […]

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த சில வாரங்களுக்கு நீண்ட தூர மற்றும் மிக நீண்ட தூர இடங்களை இணைக்கும் அகலமான உடல் விமானங்களில் சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்தக் குறைப்பு இப்போது முதல் ஜூன் 20 வரை செயல்படுத்தப்படும், அதன் பிறகு குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. DGCA-வினால் போயிங் 787 விமானங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு, மேற்கு ஆசியாவில் […]

ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]

“வாழ்க்கை எப்போதும் சரியாக நடக்கிறதில்ல… இதற்குப் பின்னால் என்ன காரணம்? பிரம்மனே தலையெழுத்து எழுதுபவர் என்றால், அவரிடமே சென்று வழிபட்டால் வாழ்க்கை மாறாதா?” என்ற சிந்தனை உங்கள் மனதிலும் தோன்றுகிறதா? அப்படியானால், நீங்கள் செல்ல வேண்டிய அதிசயத் தலம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். சமய குருக்களான சிவன், விஷ்ணுவுக்கு போலவே, பிரம்மாவிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்தியாவில் வெகுவாக இல்லை. பெரும்பாலும் பெருமாள் கோயில்களில், நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா சிறு உருவமாக […]

ஜோதிடத்தில் குரு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். குரு, அறிவு, நல்லொழுக்கம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் அந்தஸ்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறார். குரு ஜூன் 9 ஆம் தேதி அஸ்தமனமாகிறார் என்பது அறியப்படுகிறது. அது ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 04:44 மணிக்கு மீண்டும் உதயமாகும். இந்து நம்பிக்கைகளின்படி, குரு மறையும் காலத்தில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவதில்லை. குரு உதயமாகும் போது, ​​அதன் நேர்மறையான விளைவு சில […]

வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை ஆராய இந்திய தேர்தல் ஆணையம் (ECI), UIDAI உடன் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை நாம் நல திட்டங்கள் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டுகள் வாங்குகள், பான் எண் பெறுவது , பாஸ்போர்ட் பெறுவது என பல செயல்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம். […]

டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இன்று ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஒரு அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இததனால் விமான தரையிறங்கிய பிறகு, பயணிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் விமானத்திற்குள் சிக்கிக் கொண்டனர். பிற்பகல் 2:25 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த […]