சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

நார்வே செஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் டொம்மராஜு குகேஷ், ஜூன் 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலக நம்பர் 1 வீரரான மக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் மக்னஸ் கார்ல்சன் ஒரு தவறு செய்ததினால், குகேஷ் பெரிய முன்னிலை பெற்றார், இது அவருடைய மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. தனது தோல்வியால் மிகவும் விரக்தியடைந்த கார்ல்சன் வெளிப்படையாகவே கையை மேசையில் தட்டி அதிருப்தியை […]

புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் […]

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை, […]

கமல் ஹாசனின் அண்ணன் மகள் சுஹாசினி மணிரத்னம் ஒரு பிரபலமான நடிகை. தன் சித்தப்பா கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் கூட அவர் நடித்தது இல்லை. சித்தப்பா கமலுக்கும், சுஹாசினிக்கும் இடையே 7 ஆண்டுகள் தான் வயது வித்தியாசம். சுஹாசினிக்கு 63 வயதாகிறது. கமல் ஹாசனுக்கு 70 வயதாகிறது. வயது வித்தியாசம் குறைவாக இருந்ததால் சித்தப்பா, மகளாக இல்லை அண்ணன், தங்கையாக தான் கமலும், சுஹாசினியும் வளர்ந்திருக்கிறார்கள். […]

போர் நிறுத்துவது தொடர்பாக, ஐரோப்பிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில், ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சு நடத்தினர். முதற்கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இந்த பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஇருந்தது. ஆனால், எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என, ரஷ்யா தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: […]

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு […]

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2, 2025) ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, சந்திப்பு ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது, ​​இரு நாடுகளின் பிரதிநிதிகளின் அணுகுமுறையும் கடுமையாகவே இருந்தது. துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் பிடான், இஸ்தான்புல்லின் சிராகன் அரண்மனையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார். இது ஒட்டோமான் […]

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு”-தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு. தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைப்பு. நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி கடந்த […]

நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]