மதுரையில் யூடியூப் வீடியோவில் பகிரப்பட்ட தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்துப் பொருளை உட்கொண்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த மாணவி எடுத்த விபரீத முடிவு, ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துள்ளது. சமூக வலைதளங்களில் உலவும் சரிபார்க்கப்படாத மருத்துவத் தகவல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது உடனடி பணப்பரிமாற்ற சேவையான IMPS (Immediate Payment Service)-க்கான புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், குறிப்பாக அதிக அளவிலான பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் என தெரிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில், ஆன்லைன் மற்றும் […]

தமிழ்நாட்டில் பல்வேறு சூழல்களால் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ‘அன்புகரங்கள்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெற்றோரை இழந்த அல்லது போதிய அரவணைப்பு கிடைக்காத 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதம் தோறும் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் பள்ளிப் […]

கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டின் வயதை துல்லியமாக கண்டறிவது என்பது மிகவும் சவாலான காரியம். சந்தைகளில் மாடுகளை வாங்கும்போதும், விற்கும்போதும் அல்லது முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதும் அதன் சரியான வயது தெரிந்திருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணிக்கும் பாரம்பரிய முறையே மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. மாடுகள் பிறக்கும்போது அவற்றுக்கு நிரந்தரப் பற்கள் […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்டு வரும் அதிரடி களப்பணிகள், ஆளும் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலின் பலமுறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே, அவருக்கு நேரடி சவாலை உருவாக்கும் விஜய்யின் இந்த வியூகம் அரசியல் விமர்சகர்களிடையே உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசுக்கும் தவெக-விற்கும் இடையே நிலவும் மோதல் போக்கு, கொளத்தூரில் இன்னும் வீரியமடைந்துள்ளது. ஆளும் […]

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கி வரும் அவரது இந்த முடிவு, ஒரு நீண்ட நெடிய அரசியல் சகாப்தத்தின் நிறைவாக பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் திகழ்ந்த துரைமுருகன், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையிலும் […]

மேற்கு வங்கத்தில் நிஃபா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். விலங்குகளிடம் […]

கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இதனால், வரும் காலத்தில் எரிபொருள் விலைகள் குறையக்கூடும் என்ற பெரும் நம்பிக்கையில் வாகன ஓட்டிகள் உள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு இப்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு முன்னணி நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்று கணித்துள்ளது. இது நடந்தால், இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டுபவர்கள் விலை உயர்வைச் […]

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் […]

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பதவிக்கு வேறு எந்த வேட்பாளரும் முன்மொழியப்படவில்லை என்றும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நிதின் நபின் பாஜக-வின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், இது கட்சி மட்டங்களில் அவருக்குள்ள பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது. அவர் மோடி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் ஜே.பி. நட்டாவிற்குப் பதிலாக இந்த பொறுப்பை […]