தரிசு நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் சத்தமில்லாமல் வளர்ந்து கிடக்கும் சோற்றுக் கற்றாழை, இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் தோற்காத மாற்றுப் பயிராக உருவெடுத்துள்ளது. ‘நலம் தரும் நற்குமரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, வெறும் மருத்துவச் செடியாக மட்டும் பார்க்கப்படாமல், நிலையான வருமானம் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்டமான தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. மிகக் குறைந்த நீர்ப்பாசனம், வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லாத தன்மை ஆகியவற்றுடன், மண்ணின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் நில உடைமையாளர்களின் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை வருவாய்த்துறை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. சொத்து விற்பனை, வங்கிக் கடன் பெறுதல் மற்றும் வாரிசுரிமை மாற்றங்கள் எனப் பல நிலைகளில் பட்டா முதன்மையான ஆவணமாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சிறு எழுத்துப் பிழைகள் அல்லது தவறான சர்வே எண்கள் எதிர்காலத்தில் பெரும் சட்டச் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், உரிய நேரத்தில் […]
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தன்னை ஒரு வழக்கறிஞர் என அடையாளத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்ட பூசாரிப்பட்டியை சேர்ந்த அலமேலு (25) என்ற பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முக்கியப் புள்ளிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த திட்டமிட்ட வேட்டையில், இதுவரை 13 பேர் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோசடி […]
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது அணியின் முதுகெலும்பாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணையவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலில் ஓபிஎஸ் பக்கம் உறுதியாக நின்ற வைத்திலிங்கம், தற்போது அந்த அணியில் நிலவும் அரசியல் தேக்கநிலை மற்றும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவது போன்ற காரணங்களால் […]
இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி வெறும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல், ஒரு நம்பகமான முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகின்றன. இருப்பினும், அவற்றில் முதலீடு செய்யும்போது விலைகளில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வரி விதிகளைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். வரி வல்லுநர்களின் கூற்றுப்படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி முதன்மையாக இரண்டு காரணிகளைப் பொறுத்தது: முதலீட்டின் வகை மற்றும் வைத்திருக்கும் காலம். சரியான நேரத்தில் முதலீட்டை மீட்டெடுக்கவில்லை என்றால், […]
திருமணமான புதிதில் தம்பதிகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பெற்றோருடன் வசிக்காமல் தனியே குடித்தனம் நடத்த வேண்டும் என்ற பிரபல உறவுமுறை ஆலோசகர் அஜய் கே பாண்டேவின் கருத்து, இணையதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய குடும்ப அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் கொண்டாடப்பட்டாலும், ஒரு புதிய பந்தம் வலுபெற ‘தனிமை’ மற்றும் ‘சுதந்திரம்’ எவ்வளவு அவசியம் என்பதை அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. தம்பதிகள் தனியே வாழ்வதன் மூலம் ஒருவருக்கொருவர் […]
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், தம்பதியினருடன் சேர்த்து அவர்களது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். லாலாபேட்டை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் […]
தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சுயவேலைவாய்ப்பு, கைவினைத் தொழில் மற்றும் உயர்கல்வி எனப் பல பிரிவுகளின் கீழ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டங்கள் […]
இன்றைய இயந்திரமயமான உலகில், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் இல்லத்தரசிகளுக்கும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் ‘பிரஷர் குக்கர்’ ஒரு வரப்பிரசாதமாக தெரியலாம். 45 நிமிடம் ஆகும் சமையலை வெறும் 10 நிமிடத்தில் முடித்துத் தரும் இந்த தொழில்நுட்பம், நேரத்தை மிச்சப்படுத்தினாலும் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்லப் பறித்து வருகிறதோ என்ற அச்சம் உணவியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, குக்கரில் சமைக்கப்படும் சாதம், சத்தற்ற சக்கையாக மாறுவதுடன் பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு […]

