2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், பலரும் தங்களின் முதல் இலக்காக (Resolution) உடல் எடையை குறைப்பதையே வைத்திருப்பார்கள். ஆனால், குளிர்காலச் சூழலும், அதனால் ஏற்படும் உடல் சோர்வும் இந்த இலக்கை எட்டுவதற்குப் பெரும் தடையாக அமைகின்றன. கடும் குளிரில் ஜிம்மிற்குச் சென்று வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சி செய்ய தயங்குபவர்களுக்கு, வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமே எடையைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர். குளிர்காலத்தில் சூரிய […]

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி 150 கி.மீ தொலைவில் வீசியெறிந்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியில் வசித்து வந்த தேவா (எ) ரித்தீஷ் (27) என்ற கூலித்தொழிலாளி, கடந்த டிசம்பர் 26 முதல் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் […]

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கிய பழைய நிர்வாகிகளுக்கும், தற்போதைய தலைமைக்கும் இடையிலான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் முற்றுகையிடப்பட்ட சம்பவம், தவெக-வின் உட்கட்சிப் பூசலை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. வெள்ளக்கோவிலில் நகர அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த செங்கோட்டையனை, விஜய் மக்கள் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக […]

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாகப் பயணித்து வரும் நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஒருபுறம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் விஜய் மும்முரம் காட்டி வரும் வேளையில், அவர் மீதான விமர்சனங்களும் அரசியல் தளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம் என திமுக தலைமை கருதினாலும், தமிழகத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் […]

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் (Excise) வரியில் பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2026 பிப்ரவரி 1 முதல் […]

2024-25-ம் ஆண்டுக்கான  C, D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை. வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட […]

தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 24-ம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த நவம்பர் மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து […]

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான நீரால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. அங்கு 6 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த மரணம் உள்ளூர் மக்களிடையே கோபத்தையும் போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் உள்ள மராத்தி மொஹல்லாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் சாதனா சாஹு, வீட்டு விநியோகக் குழாய் நீரில் கலக்கப்பட்ட பாலைக் குடித்த பிறகு, குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு […]

வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 31 அன்று ஷரியத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகன் தாஸ் என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகன் தாஸ் மீது நடந்த தாக்குதல் கோகன் தாஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.. பின்னர் அவர் தீ […]