fbpx

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவப்படம் பொறித்த ’பே சிம்’ (Pay CM) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பாஜக அமைச்சர்கள், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக …

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

2022-23 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், …

ஐ ஐ எப் எல் வெல்த் ஹியூரான் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 2022 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.ஐ.எப்.எல்.வெல்த் ஹியூரான் இந்தியா அமைப்பு 2022ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை விட கவுதம் அதானி …

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டாவில் வசிக்கும் கல்லூரி மாணவர் ராஜ்மோகன் சேனாபதி (21). இவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜ்மோகனின் அண்ணன் பிஸ்வாமோகன் (25). இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இந்நிலையில், ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதை அவரது அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார்.

இதனால், அடிக்கடி அண்ணனுக்கும், …

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, 6-வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் …

கர்நாடகாவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்..

புரோட்டீன் பவுடரை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு இயக்கத்தை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ …

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;-

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவித உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் …

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய …

கார்பரேட் நிறுவனங்களின் தரகராக செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நீரா ராடியா மீது எந்த குற்ற முகாந்திரம் இல்லாத காரணத்தால் 14 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது தொழிலதிபர்கள் சார்பில் பெரு நிறுவனங்களின் தரகராக நீராராடியா செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் , இவர் மீது 2 ஜி ஊழல் வழக்கு உள்பட 14 …

மாநில கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில், இந்தி என்பது தேசிய மொழி அல்ல என மாநில கல்வி கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில், மாநிலக் கல்வி கொள்கை வகுப்பதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. …