அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது தொடர்ச்சியான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.. அவற்றில் தனது உரிமைகளை அங்கீகரிப்பது மற்றும் போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சர்வதேச சமூகம் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான உத்தரவாதங்களை வழங்குவதும் ஆகும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறினார். […]

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டு, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், போதை பொருட்களை தடுக்க தவறியது, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்குவதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக […]

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), சட்டவிரோதமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ஆடியோபுக் ஆகியவற்றை பகிர்ந்து வந்த 3,000-க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு அணுகலை முடக்குமாறு மெசேஜிங் தளமான Telegram நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை சேவை வழங்குநர் பொறுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆடியோபுக்குகளை பைரசி முறையில் பகிர்ந்து வந்த 3,000-க்கும் அதிகமான டெலிகிராம் சேனல்களை […]

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன.. மறுபுறம் அதிமுக […]

ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்க போரின் தாக்கம் மத்திய ஆசியாவில் பெரும் பதட்டங்களை உருவாக்கி வருகிறது. உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, போர் பதட்டங்களுக்கு மத்தியிலும் இந்தியக் கொடியுடன் கூடிய சில டேங்கர்களுக்கு வழிவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு மட்டத்தில் சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரண்டு இந்திய எண்ணெய் டேங்கர்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உள்நாட்டு நுகர்வோர் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், இந்த நேரத்தில் உள்நாட்டு எரிவாயு விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்தக்கூடாது என்றும் இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா, […]

ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பெறுவதற்கான ஒரே வழி நல்ல ஆரோக்கியம்தான். நல்ல ஆரோக்கியம் ஒரு நபரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. அதனால்தான் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். குறிப்பாக, சாப்பிடும் முறை சரியாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதையும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறிப்பிட்ட நேரத்தில், சரியான இடைவெளியில் உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. குறிப்பாக பழங்கள் சாப்பிடும்போது சில […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.. இந்த நிலையில் ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான சஃபேசியா விஷ்ணு என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரானின் “தற்கொலை” படகு தாக்கியது.. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மார்ஷல் தீவுகளின் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]