ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், காதல் மற்றும் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியை சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண்ணின் வீட்டில், குளிர்சாதனப் பெட்டி (AC) பழுதைச் சரி செய்ய வந்த ஷேக் அகமது (27) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தீவிர காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்காக தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து […]

சந்தைக்குச் சென்று நாம் வாங்கி வரும் காய்கறிகள் பார்ப்பதற்கு மிகவும் பசுமையாகவும், பளபளப்பாகவும் இருக்கலாம். ஆனால், அந்தப் பளபளப்பிற்கு பின்னால் பூச்சிக்கொல்லிகள், கண்ணுக்குத் தெரியாத தூசு மற்றும் நுண் பூச்சிகள் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. சாகுபடியின் போது விளைச்சலை அதிகரிக்கவும், பூச்சிகள் தாக்காமல் இருக்கவும் தெளிக்கப்படும் ரசாயனங்கள், தண்ணீரில் மட்டும் கழுவினால் முழுமையாக நீங்கிவிடுவதில்லை. வெறும் இரண்டு நிமிடம் குழாய் அடியில் காட்டுவதால் மட்டுமே காய்கறிகள் சுத்தமாகிவிடும் என்று நினைப்பது ஒரு […]

தமிழக அரசியல் களம் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’. இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்த கால ஆட்சிச் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டியதுடன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் திமுகவே ஆட்சியமைக்கும் என்று ஓபிஎஸ் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் […]

சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு சாதாரண வாடகை வீட்டை தலைமையிடமாக கொண்டு, சுகந்தி என்ற பெண் தனது ஒட்டுமொத்த குடும்பத்தோடு இணைந்து நடத்திய இந்த க்ரைம் த்ரில்லர் மோசடி, தற்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளது. தனது தாய் பாத்திமா, தம்பி மணி, தங்கை கணவர் வினோத் என ஒரு குடும்பமே ஒரு கம்பெனி போல செயல்பட்டு, காதல் என்ற உணர்வை ஆயுதமாகப் பயன்படுத்திப் பல இளைஞர்களின் வாழ்க்கையை சிதைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]

புற்றுநோய் என்பது உடலின் உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களை சேதப்படுத்தும் ஒரு ஆபத்தான நோயாகும். புற்றுநோய் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் 2026 அறிக்கையின்படி, 1990 முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களிடையே புற்றுநோய் இறப்புகள் 44 சதவீதம் குறைந்துள்ளன. சிகிச்சைகள் மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிடுவதால் இந்த வெற்றி சாத்தியமானது. இருப்பினும், இந்த உறுதியளிக்கும் ஆராய்ச்சியுடன், ஒரு கவலையான ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. பெருங்குடல் புற்றுநோய் அல்லது குடல் […]

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, அடிப்படைப் பணியாளர் உரிமைகளுக்காகவும் அவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இத்தகைய […]

சிலர் தங்கள் புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் எளிதான வழிகளைக் கண்டுபிடித்து விரைவாக வெற்றியை அடைகிறார்கள். குறுக்குவழி என்பது தவறான வழி அல்ல. நேரம், முயற்சி மற்றும் ஆற்றலைச் சேமிக்க இது ஒரு புத்திசாலித்தனமான வழி. ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே இந்த வகையான மூலோபாய சிந்தனையைக் கொண்டுள்ளனர். கடினமான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் எளிதான தீர்வுகளைக் கண்டுபிடித்து வெற்றியை அடைகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் யார் […]

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.. அந்த வகையில் தாய்மொழி தினத்தை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.. அதில் “ நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு […]

சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார். அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் […]