தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில் பயன்படுத்திய சொல்லாடல் அவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசுகையில் ‘கற்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு அவையிலேயே உடனடியாக எழுந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தங்களை ‘கைலாசாவின் ஆன்மிக தூதரக உறுப்பினர்கள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புறவை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள நித்யானந்தாவின் ‘கைலாச தியானபீடத்தில்’ அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா […]
ராணிப்பேட்டை தெங்கால் பாலாற்றங்கரை அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான பண்ணைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அமர்ந்து நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 3 பேர், தகராறு செய்து காதலனை கண்மூடித்தனமாக தாக்கினர். பின்னர், கத்திமுனையில் மிரட்டி அந்த இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார். மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், […]
நேபாள திடீர் வெள்ளத்தால் 1200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் […]
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]
தனியார் இருசக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ‘பைக் டாக்ஸி’யாக இயக்க மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். பைக் டாக்ஸி சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் […]
பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி, வீரச் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார். அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்திய விமானப்படை சேவையிலிருந்து ஓய்வுபெற்று, ஆகஸ்ட் மாதத்தில் ‘ஃப்ளை91’ நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஃப்ளை91 நிறுவனத்தின் செய்தித் […]
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் […]
2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை முன்னிட்டு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து தொடரின் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு ஓய்வு அறிவிக்குமாறு தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் ரோஹித்திடம் கேட்டுக் கொண்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதலால் ரோஹித் சர்மா […]

