மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ஆசிஷ் பானர்ஜி, பிர்பூமின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அருகே கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளதாவது, தனது மாணவர் பருவத்திலிருந்தே தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் […]

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சூடாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு, ரவை வைத்து இந்த சிம்பிளான ஸ்நாக்ஸை செய்து பாருங்க. அதிக பொருட்கள் தேவையில்லை; செய்வதும் ரொம்ப ஈஸி. சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். முதலில் 2 உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 கப் ரவையை சேர்க்கவும். தேவையான […]

புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B12 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிவப்பு இறைச்சிகளில் ஆட்டுக்கறி முக்கிய இடத்தை பிடிக்கிறது. சந்தைகளில் பொதுவாக வெள்ளாட்டுக்கறி மற்றும் செம்மறி ஆட்டுக்கறி என இரு வகைகள் கிடைக்கின்ற சூழலில், உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும் குறைந்த கொழுப்பு உணவை விரும்புபவர்களுக்கும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகளை புரிந்துகொள்வது அவசியமாகிறது. வெள்ளாட்டுக்கறியை பொறுத்தவரை, அது ஒப்பீட்டளவில் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரிகளை […]

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு சப்ளையில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு முதல்முறையாக பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகபட்ச உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 அன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாட்டில் உள்ள 21 சுத்திகரிப்பு ஆலைகள் […]

கால்பந்து உலகின் புகழ்பெற்ற வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 2026-27 சீசனுடன் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது சவூதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், “இதுவே கால்பந்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், மேலும் ஒரு பிரம்மாண்டமான பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வோக் (Vogue) இதழுக்கு அவர் அளித்த […]

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் […]

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக […]

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு செயல்படுவதற்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் மாதமாகக் கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடும் […]

வயது அதிகரிக்கும்போது தசைகளின் அளவும், வலிமையும் படிப்படியாகக் குறைவது இயல்பான மாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மாற்றம் முதுமையில் மட்டுமே தொடங்குகிறது என்று நினைக்க வேண்டியதில்லை. 40 வயதிலேயே தசை இழப்பு (Sarcopenia) தொடங்கலாம் என்றும், அதைத் தடுக்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோர்டன் டி. மெட்ஸ்ல், வயது அதிகரிப்பால் ஏற்படும் தசை இழப்பை முழுமையாகத் […]

“ஒரு பஸ் வருமா?” என்று வெயிலிலும் மழையிலும் சாலையோரம் காத்திருந்த நிலை இனி மாறப்போகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வாக, ரூ.2.4 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. எண்ணூர் ஹை ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையம், இதுவரை தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக […]