செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் அடுத்த ரெட்டி குப்பம் பகுதியில், அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பார்த்திபன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, பார்த்திபனின் மனைவி ஜமுனாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த சுசில் என்பவருக்கும் இடையே […]

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் உன்னதமான பந்தம். ஆனால், இன்றும் சில ஆண்களிடம் நிலவும் பிற்போக்கான புரிதல்களும், அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளும் அந்தப் பந்தத்தை முதலிரவிலேயே சிதைத்து விடுகின்றன. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், படித்த ஆண்களிடமும் கூட பெண்களின் உடல் குறித்த புரிதல் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மென்பொருள் பொறியாளரான ராகுலுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான […]

தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” மீண்டும் ஒரு பிளவை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த அணியின் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து முற்றிலுமாக விலகி, “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஓபிஎஸ் அணியை […]

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் அல்லது உடல் வலிகளுக்குப் பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான மருந்தாகக் கருதி பாரசிட்டமால் (அசிடமினோஃபென்) மாத்திரைகளை உட்கொள்வது வழக்கம். ஆனால், இது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு புதிய ஆய்வறிக்கை மருத்துவ உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் (Mount Sinai) மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட 46 வெவ்வேறு […]

இன்று காலை முதலே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீடியோ தளமான யூடியூப் (YouTube) திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் பாதிப்பு எதிரொலித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பயனர்கள் யூடியூப் செயலியை திறந்தால், முகப்புப் பக்கத்தில் எந்த வீடியோக்களும் தோன்றாமல் ‘பிளாங்க்’ (Blank) ஆக காட்சி அளித்தது. தேடுதல் (Search) வசதியைப் பயன்படுத்தினாலும் ‘Error’ என்றே வருவதால், வீடியோக்களைப் […]

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஐடி துறையினர் போல நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றின்படி, காலில் உள்ள ஒரு சிறிய தசைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி, ரத்தச் சர்க்கரை அளவை குறைப்பதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மனிதனின் கெண்டைக்கால் பகுதியில் உள்ள ‘சோலியஸ்’ (Soleus) என்ற தசையைத் தூண்டுவதன் […]

நவீன கால காதல் மற்றும் உறவுமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட ஜாமீன் மனு ஒன்றினை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் பழங்கால எண்ணம் கொண்டவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் சட்ட ரீதியாகவும், எதார்த்த ரீதியாகவும் திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் […]

தமிழகத்தின் ஆன்மீக மரபில் நீர் நிலைகளுக்கும், வழிபாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை பறைசாற்றும் உன்னதமான திருவிழா ‘மாசி மகம்’. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக ஆற்றல் பெருகி காணப்படும் நாளாக கருதப்படும் இந்நாளில், பெரும்பாலான ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நீர் நிலைகளுக்கு […]

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு முக்கிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார நிபுணர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கத் தொடங்கியுள்ளனர். Mpox வைரஸின் ஒரு புதிய வகை (strain) தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண வகை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு “மறு சீரமைப்பு வைரஸ்” ஆகும். அதாவது, முன்பு இருந்த இரண்டு பழைய Mpox வகைகளின் மரபணு தகவல்கள் ஒன்றிணைந்து உருவான புதிய வைரஸ் […]

நாட்டின் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்காக ஒரு சிறப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் […]