தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் களத்தில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரின் இந்த நிலைக்கு என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார்.. வரும் செப்டம்பர் மாதம், ஓ. பன்னீர்செல்வம் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகி 25 ஆண்டுகள் ஆகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் அவரது உதவியாளர் வி. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அலுவலக வேலை அழுத்தம், படிப்புச் சுமை அல்லது குடும்பப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஏறக்குறைய எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், நமக்கு வரும் ஒவ்வொரு தலைவலியையும் சாதாரணமானது என்று புறக்கணிப்பது ஆபத்தானது. ஏனென்றால், அது ஒற்றைத் தலைவலியாக (மைக்ரேன்) இருக்கலாம். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? புகழ்பெற்ற […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
முன்னாள் தடகள வீராங்கனையும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வெங்கலில் சீனிவாசன் இன்று அதிகாலை காலமானார். பொன்னானியைச் சேர்ந்த 63 வயதான சீனிவாசன், திக்கோடியில் உள்ள பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை 12.30 மணியளவில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முன்னாள் மத்திய அரசு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு வரி விதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை, நீண்ட காலமாக அந்தத் தீவு நாட்டிற்கு கச்சா எண்ணெயின் முக்கிய விநியோகிப்பாளராக இருந்து வரும் மெக்சிகோ மீது அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், தனது அரசாங்கம் கியூபாவிற்கான எண்ணெய் […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற […]
வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் தனது சித்தியுடனான கள்ளக்காதலை மறைக்க, மனைவியையே கொலை செய்ய துணிந்த ஒரு கணவனின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ்குமார் – அனுசுயா தம்பதியினரின் 13 ஆண்டுகால மணவாழ்க்கை, ஒரு ரகசிய ஆடியோ பதிவால் இன்று சிதைந்து போயுள்ளது. வழக்கம்போல மதுபோதையில் வந்த ராஜேஷ்குமார் வாசலில் விழுந்து கிடக்க, அவரைத் தூக்க முயன்ற அனுசுயாவின் கையில் தற்செயலாக கணவனின் செல்போன் கிடைத்துள்ளது. அதில் […]
மது அருந்துவது என்பது ஒரு மனிதனுக்கு தற்காலிகமாக அதீத தன்னம்பிக்கையை தருவதாக பலரும் தவறாக கணக்குப்போடுகிறார்கள். பொதுவாக, மன அழுத்தம், கவலை அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படும் தருணங்களில், அதிலிருந்து விடுபட ஒரு மருந்தாகவே பலர் மதுவை நாடுகின்றனர். இந்தத் தன்னம்பிக்கை படுக்கையறை வாழ்விலும் தங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும், தாம்பத்திய உறவில் அதிக நேரம் உற்சாகமாக செயல்பட உதவும் என்றும் ஒரு மாயையான நம்பிக்கை ஆண்களிடையே நிலவுகிறது. ஆனால், […]
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகளுக்கு நடுவே இருக்கும் இனிப்பான கிரீம், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. மாலை நேர தேநீருடனும், குழந்தைகளின் விருப்பமான சிற்றுண்டியாகவும் மாறிவிட்ட இந்த கிரீம் பிஸ்கட்டுகள், உண்மையில் உடலுக்குள் மெதுவான விஷமாக (Slow Poison) செயல்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிஸ்கட்டிற்குள் இருப்பது பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான கிரீம் கிடையாது; அது வனஸ்பதி அல்லது டால்டா எனப்படும் […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் தனது மருமகனையே மாமியார் கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் வேல்முருகன், கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த குமுதா என்பவரின் மகள் பவித்ராவை திருமணம் செய்திருந்தார். உறவினர்களுக்குள்ளேயே நடந்த இந்தத் திருமணப் பந்தம், தொடக்கத்தில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டில் […]

