சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து […]

விருப்ப மனு பெயரில் பண மோசடி செய்வதாக அன்புமணி மீது டிஜிபிக்கு இமெயில் மூலம் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிச.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒருவாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது, தமிழக விவசாயிகளுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜகவை பொருத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று […]

ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்பதில் பிறந்த ராசி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை இந்திய ஜோதிட மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மனிதனின் ஆளுமை, உள்ளார்ந்த திறன்கள், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் உயர்வுகள் அனைத்தும் ராசியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த ஜோதிடக் கோட்பாட்டுடன் இணைந்து, ஆன்மிக பாரம்பரியமும் மனிதனை வழிநடத்துகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, ராசி வாரியான பரிகாரத் தலங்கள் விளங்குகின்றன. இந்தியாவில் எண்ணற்ற […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு, சந்திரா லேஅவுட் பகுதியில், ரீல்ஸ் மோகத்தால் திருமணமான பெண் ஒருவர், மற்றொரு திருமணமான போலீஸ்காரருடன் கள்ளக்காதல் கொண்டு, நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரா லேஅவுட்டில் வசிக்கும் மோனிகா (35) என்பவர், முதல் கணவரை பிரிந்து, இரண்டு மகன்களுடன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மோனிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]