விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் குறைந்த விலையில் உயர்தர விதைகளைப் பெறுவதை உறுதி செய்தல், போலியான, தரமற்ற […]

மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் சிபிஎஸ் ஆசிரியர்களுக்கு மறு நியமன காலத்தில் கடைசியாக பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று நிதித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட உத்தரவில்: தமிழ் நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக தொடர்புடைய கல்வியாண்டின் […]

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள். ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் […]

இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், மருத்துவ விடுப்பை தவிர மற்ற விடுப்புகள் வழங்கப்படாது எனவும் அரசு உத்தரவு. காலை 11 மணிக்குள் பணிக்கு வரும் ஊழியர்களின் விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரை இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து […]

தமிழகத்தில் ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும் பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்திரிகையாளர்களின் […]

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் […]

ஐரோப்பா முழுவதும் மிகவும் அரிதான மற்றும் தீவிரமான புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறுடன் ஒரு விந்தணு தானம் செய்யும் நபர் குறைந்தது 197 குழந்தைகளின் தந்தையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. 14 நாடுகளின் பொதுச்சேவை ஒளிபரப்பாளர்கள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. இந்த விந்தணுக்கள் கொபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கி (European Sperm Bank – ESB) மூலம் 14 நாடுகளில் உள்ள 67 […]

இந்தியாவில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் அமேசான் மற்றொரு முக்கிய படியை எடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 35 பில்லியன் டாலர்களை, அதாவது 3.15 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முதலீட்டுத் […]