மும்பை நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ‘ராயல் பிரியாணி ஹவுஸ்’ உணவகத்தில் அரங்கேறிய கொடூரமான கொலை சதித் திட்டம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உணவகத்தை நடத்தி வந்த ரமேஷ் படேல் (42) என்பவரை, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இணைந்து 3 முறை கொலை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. ரமேஷ் படேலின் மனைவி பிரியா (35), […]

வங்கதேசத்தில் உள்ளூர் நீதிமன்றம் ஒன்று, அரசாங்க வீட்டுவசதித் திட்டத்தில் நில ஒதுக்கீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், நாடு கடத்தப்பட்ட பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. டாக்கா சிறப்பு நீதிபதி நீதிமன்றம்-4-இன் நீதிபதி ரபியுல் ஆலம் இந்தத் தீர்ப்புகளை வழங்கினார்; ஒவ்வொரு வழக்கிலும் ஐந்து ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டது என்று […]

நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]

நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். […]

தவெக கூட்டங்களில் திமுகவை மட்டுமே விமர்சித்து வந்த விஜய் தற்போது அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.. சில நாட்களுக்கு முன் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விமர்சித்தார்.. விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதிமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், விஜய் பேசுவதெல்லாம் குப்பை […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐய்யர் மலையிலிருந்து குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக அதிவேகத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் உருக்குலைந்து பலத்த சேதமடைந்தன. பேருந்திற்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கித் […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்க காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது.. இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.. அவர் தனது உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்களவையில் காரசாரமான காட்சிகள் அரங்கேறின. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே […]

தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், பயன்படுத்தி கைவிடப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற மின்னணுக் கழிவுகளில் இருந்து ரூ. 27 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள தங்கத்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளார். இந்த சம்பவம், இரண்டாம் கை விற்பனை தளங்களில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளுக்கான தேவை திடீரென அதிகரிக்க காரணமாகியுள்ளது. ஆனால், தேவையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் இல்லாமல் இந்தச் செயல்முறையை முயற்சிப்பது ஆபத்தானது என்று அவர் எச்சரித்துள்ளார். ஆன்லைனில் ‘கியாவோ’ […]

Oracle நிறுவனம் தனது சமீபத்திய வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.. அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களில் தனது பிரம்மாண்டமான முதலீடுகளுக்கு நிதியளிக்க வழிகளைத் தேடும் நிலையில், இந்த மென்பொருள் நிறுவனம் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.. அந்நிறுவனம் தனது லட்சிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதில் பெருகிவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்படி, அந்த நிறுவனம் 20,000 முதல் 30,000 […]

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 சந்திரன்கள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது, விரைவில் அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. முதல் பார்வையில், சந்திரன் பல்கிப் பெருகியது போலவும், அதை சுற்றி பிரகாசமான ஒளிரும் வடிவங்கள் தோன்றியது போலவும் காட்சியளித்தது. பல வான ஆர்வலர்கள் இந்த அசாதாரணமான மற்றும் அழகான […]