உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர். பசியாற உணவு தேடி […]

அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். […]

நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் […]

“ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் தாமதமாகிவிட்டது ” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி மையங்களை இலக்காகக் கொள்ளவோ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் “அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு உலக நாடுகளிடையே […]

பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க மானியம் வழங்கப்படுகிறது. காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌, சேவைத்‌தொழில்களுக்கு, ரூ.20 லட்சம்‌ வரையிலான […]

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]

சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி […]

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் […]

ஏர் இந்தியா நிறுவனம், அடுத்த சில வாரங்களுக்கு நீண்ட தூர மற்றும் மிக நீண்ட தூர இடங்களை இணைக்கும் அகலமான உடல் விமானங்களில் சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்தக் குறைப்பு இப்போது முதல் ஜூன் 20 வரை செயல்படுத்தப்படும், அதன் பிறகு குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. DGCA-வினால் போயிங் 787 விமானங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பு, மேற்கு ஆசியாவில் […]

ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]