அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் அதிகம் தேடப்பட்டு வ்ந்த குற்றவாளிகளில் ஒருவரான கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (NIA) புதன்கிழமை கைது செய்துள்ளது. அதிகாரிகள் அன்மோல் பிஷ்னோயை இன்று புது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர். மும்பை போலீஸ் இரண்டு முறை அனுப்பிய நாடு கடத்தல் கோரிக்கைகளின் அடிப்படையில், அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (அங்குள்ள நேரம்) அன்மோலை நாடுகடத்தி இந்தியாவுக்கு அனுப்பியது. அன்மோல், தற்போது […]

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிரதமர் கோவை வருகை தந்துள்ளார்.. பிஎம் கிசான் திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை கோவை விழாவில் பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்.. தனி விமானம் கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.. விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா மனதை மாற்ற ரோகிணி தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மனோஜை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வங்கி ஊழியர் ஒருவரை காதலித்ததாகவும், அவர் கிரிஷ் இருப்பதை தெரிந்து கொண்டு விட்டு சென்றதாக கூறுகிறாள். மனோஜை நான் உண்மையாக காதலிக்கிறேன். கிரிஷ் விஷயத்தை சொன்னால் மனோஜ் தன்னை விட்டு போய்விடுவார் என்ற பயத்தில் தான் உண்மையை மறைத்துவிட்டேன் […]

ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் சில படங்களே மக்களின் மனதை கவர்கின்றன. ஒரு படத்தை அந்த அளவுக்கு உயர்த்துவதில் மிகப் பெரிய பங்கை வகிப்பவர்கள் இயக்குநர்கள். இயக்குனர்கள் தனித்துவமான கதை சொல்லும் முறை, சினிமா மொழியை கையாளும் திறன் மற்றும் அணுகுமுறைகள் இவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. தங்கள் திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை வழங்குவதால், இவர்களின் சம்பளமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் […]

ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]

மின்தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா ஏஐ மிஷனின் (IndiaAI Mission) கீழ் ‘YUVA AI for ALL’ என்ற நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு—குறிப்பாக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய (Artificial Intelligence) உலகத்தை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடநெறி சுமார் 4.5 மணி நேரம் கொண்டதாகும், மேலும் எவர் வேண்டுமானாலும் தங்களுக்கு வசதியான வேகத்தில் […]

பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]