குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தாக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. சிபி மாவட்டத்திற்கு அருகிலுள்ள நசிராபாத்தின் ரபி பகுதி வழியாக ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​ரயில் பாதையில் ஒரு சக்திவாய்ந்த IED குண்டு வெடித்ததால், பல பெட்டிகள் தடம் புரண்டன. குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாகவும், ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்றார்கள்? ஜாஃபர் எக்ஸ்பிரஸ் […]

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]

மிசோரமில் தண்ணீரில் பரவிய இரைப்பை குடல் அழற்சி வெடிப்பு நோயால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள காகிச்சுவா கிராமத்தில், நீரினால் பரவும் ஒரு பொதுவான நோயான இரைப்பை குடல் அழற்சியின் கடுமையான வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 130 குடும்பங்கள் வசிக்கும் மற்றும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்த தொலைதூர குக்கிராமத்தில், […]

பாஜகவுடன், கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக போராட்டம் […]

வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் […]

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் […]

ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவுக்கான துாதராக, பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். , ஐ.நா.,வின் குழந்தைகள் நல நிதியம், உலகின், 190 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஏற்கனவே […]

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் […]

மதுரையில் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜ் என்பவரது 5-வது மகள் திவ்யா, எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்தவர். மலேசியாவில் உயர்கல்வித் தொடரப் போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி, அதற்கான அனைத்து ஆவணங்களையும் காட்டியதால், குடும்பத்தினருக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை. படிப்புக்காக தேவையான 5 லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்ற திவ்யா, கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பியிருந்தனர். இந்நிலையில், […]