2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் வெப்பநிலை 1.5°C க்கு மேல் உயரக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. புவி வெப்பமடைதல் தான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கை ஒரு திடுக்கிடும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படி, 2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் சராசரி […]

இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 31 மீனவர்கள் அக்டோபர் 31-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் […]

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, […]

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]

2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. எனினும் SIR ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் சதிச்செயல் என்றும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.. அந்த வகையில் திமுக தலைவரும் […]

யுனைடெட் கிங்டம் நாட்டின் லெஸ்டரில் வசிக்கும் 40 வயதான விஸ்வாஸ் குமார் ரமேஷ், கடந்த ஜூன் 12 அன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். அந்த துயரமான சம்பவத்துக்குப் பல மாதங்களுக்குப் பிறகு, ரமேஷ் தான் உயிருடன் இருப்பதை ஒரு மேஜிக் என்றும், ஏர் இந்தியா விமான விபத்தில் […]

தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இவை தவிர, பாமக, தேமுதிக, அமமுக ஆகியவை இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை.. எனினும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைந்தால் தேர்தல் களம் […]

குறைந்த விலையில் ஒரு பெரிய உயர் தொழில்நுட்ப டிவியை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ரியல்மி 50-இன்ச் அல்ட்ரா HD 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.42,999, ஆனால் தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 77 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் இந்த டிவியில் பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை […]