விவசாயிகள் 30-ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். […]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வானிலை நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.மேலும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டமும் நடைபெற்றது. இதில், நிகழ்நேர பேரிடர் கண்காணிப்பு கருவிகள், புயல் சீற்ற மாதிரி, மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல்பாட்டு திட்டம், சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையின் […]

சென்னை புறநகர் ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில் சேவைகளில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீப காலங்களில், ஓடும் ரயில்களில் நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), […]

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், ‘ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், […]

இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, வடதமிழகம், […]

வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா இனி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீரான […]

நடந்து செல்லும் போது சாலையில் திடீரென பணம் கிடைத்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.. ஆனால் அந்த நேரத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் பணத்தை நாம் எடுக்கலாமா? கூடாதா? அது சுபமானதா? அது அசுபமானதா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் படி, சாலையில் காணப்படும் பணத்திற்கு சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சாலையில் பணம் கிடைத்தால், அது லட்சுமி தேவி உங்களிடம் மகிழ்ச்சி […]

சென்னை போரூரில் 2017-ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஹாசினி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]