2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கோடையில், தாகம் எடுப்பதால் நாம் இயற்கையாகவே தண்ணீர் குடிக்கிறோம். இருப்பினும், குளிர்காலம் வரும்போது, ​​நிலைமை முற்றிலும் மாறுகிறது. குளிரில் தாகம் எடுக்காததால் பலர் தண்ணீர் குடிப்பதை நிறுத்துகிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அது சூடாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைந்த தண்ணீர் குடிப்பது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும் […]

தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரவுப் பணி செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்கள் இயற்கையான உடல் கடிகாரத்திற்கு எதிராக செயல்படுவதால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலானது. ஆனால், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப், இரவுப் பணி செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வெறும் நான்கு விஷயங்களைப் பின்பற்றினால் போதும் என்று தனது சமூக வலைதளத்தில் எளிமையாக விளக்கியுள்ளார். […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் விஷ்வா (20), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை திருமணம் செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்வாவுக்கு, புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்துள்ள தானாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் […]

உலகில் எத்தனையோ நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரமே மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில் ‘சிறிய ஆப்பிள்’ என்று பொருள்படும் மான்சினெல்லா என்ற சொல்லிலிருந்து இதன் பெயர் வந்தது. ஆப்பிள் போல இருக்கும் ஆபத்து : கரீபியன் பகுதியை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள் சுமார் 15 மீட்டர் (49 அடி) […]

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டு வரப்பட்டது.. மேலும், அரசு தரப்பில் […]