வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வடகிழக்கு […]

தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு கடுமையான காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், ஹமாஸ் தனது ஆயுதங்களை கீழே போடவில்லை என்றால், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஹமாஸ் ஆயுதங்களை களைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளதா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர், “எந்தவொரு […]

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், ஃபேஸ்புக் மூலம் போலி அடையாளத்துடன் அறிமுகமான இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை ஏமாற்றி உறவு கொண்டதாக கூறி, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், “25 வயதான நியாஸ் அகமது கான் என்பவர், ஃபேஸ்புக்கில் தன்னை ‘பேபி ராஜா’ என்ற புனைப்பெயருடன், இந்து இளைஞராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து, 23 வயதான கீர்த்தி சிங் […]

கேரள மாநிலத்தில் கல்லூரிப் பேராசிரியை ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரோஸ் (28) மற்றும் அவரது நண்பரான கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்டனி (27) ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரிப் பேராசிரியை ஒருவரைச் சந்தித்தபோது அறிமுகமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அந்த […]

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரதிதேவி (27). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு தற்போது 11 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும், 7 வயதில் ஸ்ரீகரன் என்ற மகனும் உள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்டபோதிலும், சில காலமாக மனைவி ரதிதேவியின் நடத்தை மீது […]