நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க நவி மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவு. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 16-வேலண்ட் நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பிசிவி-16) உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு, நவி மும்பையில் உள்ள டெக்இன்வென்சன் லைப்கேர் நிறுவனத்திற்கு நிதி உதவியை அனுமதித்துள்ளது. நிமோனியா, மூளைக்காய்ச்சல், காது தொற்று போன்றவற்றிலிருந்து தடுக்க […]

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாமதமான முடிவுகள் காரணமாக ஆரம்பத்தில் நாட்டில் கூடுதலாக 23,000 கோவிட் இறப்புகளுக்கு பங்களித்ததாக UK COVID விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, ஜான்சன் ஆரம்பத்தில் வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார், மேலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதைத் தொடர்ந்து தாமதப்படுத்தினார். இந்த அறிக்கையின் தலைவரான முன்னாள் நீதிபதி ஹீதர் ஹாலெட், தொற்றுநோய் காலத்தில் அரசாங்கம் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் குழப்பமான சூழலை அனுபவித்ததாகக் கூறினார். […]

ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]

வங்கதேசத்தின் டாக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கட்டிடங்களை சேதப்படுத்தியது, பல இடங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்தியது மற்றும் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவில் நான்கு பேரும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியான நர்சிங்டியில் ஐந்து பேரும், புறநகர் நதி துறைமுக நகரமான நாராயண்கஞ்சில் ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காசிபூரின் புறநகரில் உள்ள தொழில்துறை நகரத்தில் மட்டும், […]

தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை நேற்று முதல் அமலுக்கு […]

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் பாபிரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்க உறைவிடப் பள்ளியை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கி அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 ஆசிரியர்களை கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள அக்வாரா பகுதியில் செயின்ட் மேரீஸ் என்ற தங்கும் வசதியுடன் கூடிய கத்தோலிக்க பள்ளி செயல்படுகிறது. யெல்வா மற்றும் மோக்வா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை […]

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் […]

மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ‌ ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]