அவசரகாலத்தில் பணம் தேவை எனில் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெறுவது ஒரு வசதியான வழி. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதன் அபாயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.. ரொக்க முன்பணம் என்பது ஏடிஎம் அல்லது வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் செயல்முறையாகும். இது வழக்கமான ஷாப்பிங்கிலிருந்து வேறுபட்டது. ஷாப்பிங்கில், பொருட்கள் வாங்கப்படுகின்றன, ஆனால் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பீகார் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பீகாரில் உள்ள தனது கிளர்ச்சித் தலைவர்கள் மீது பாஜக தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. பீகாரைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மின் அமைச்சர் பதவியை வகித்த இவர், முன்னாள் மத்திய உள்துறை செயலாளராகவும் இருந்தவர், கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து […]
பலர் தங்கள் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இருப்பினும், இது கெட்டுப்போக வேண்டிய உணவு என்பதால், பாதுகாப்பாக சேமிக்கப்படாவிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களில், பச்சைக் கோழியை குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு நேரம் வைக்கலாம், அதை எப்படி சேமிப்பது, என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். பச்சைக் கோழியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். […]
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் […]
தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதி உள்ள கடிதத்தில் “ எங்கள் கட்சி (தவெக) தற்போது தமிழகமெங்கும் தெளிவான, கணிசமான ஆதரவையும் உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவது எங்கள் உறுதியான நோக்கம். இந்த […]
கிவி பழம் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இந்த பழம் உடலுக்கு பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கிவி பழத்தை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குவது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் விமானப்படை பயிற்சி தளம் உள்ளது.. இங்கிருந்து நேற்று மதியம் 2.30 மணியளவில் புறப்பட்ட பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தது.. அப்போது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து விட்டு விமானத்தை கீழ் நோக்கி இறக்க முயற்சி செய்த போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.. இதனால் விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.. […]
சமூக ஊடகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு ராஜினாமா செய்ய உள்ளார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ட்ரம்ப் ராஜிநாமா செய்தால் பதவி ஏற்கும் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் உடனடியாக ட்ரம்ப்க்கு மன்னிப்பு வழங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படாத, நம்பகத்தன்மை இல்லாத சமூக ஊடக கணக்குகளிலிருந்து வந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். X தளத்தில் பலரும் ஒரே […]
சென்னை மாநாகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உண்வு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச்செலும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது […]

