8 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு நேரடியாக ஸ்கிராப்பிங் செய்ய அனுப்பப்படும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவா மாநிலத்தின் சாலைப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் முக்கிய போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, எட்டு நாட்களுக்கு மேல் சாலைகளில் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு […]

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட், மே 4ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாட்டில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆவடி உள்ளிட்ட தேர்வு […]

ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதி சில காலமாக இருந்து வந்தாலும், கூகிள் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல உதவும். அந்தவகையில், கூகுள், Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முன்கூட்டிய பூகம்ப எச்சரிக்கைகளை […]

திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் முத்துகிருஷ்ணனுக்கு, எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரித்துள்ளது. ஆரணி மற்றும் போளுர் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பதவியில் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு […]