85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தல், ஆறு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த விவரங்களை 2025 அக்டோபர் 06 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 60 (சி)-ன் படி […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியான பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அவர் மக்கள் மத்தியில் கூட்டணி குறித்தும், திமுக அரசு குறித்தும் அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைத்திருப்பது “வெற்றுக் கூட்டணி” என்று விமர்சித்தார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று சூளுரைத்த அவர், இந்தக் கூட்டத்தில் தவெக […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மிகவும் தொன்மை வாய்ந்த வதாரண்யேஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவராக வதாரண்யேஸ்வரர் தாயார் ஞானாம்பிகையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மூலவர், பக்தர்களுக்கு அறிவு, செல்வம், மற்றும் ஆரோக்கியத்தை வாரி வழங்குவதாக போற்றப்படுகிறார். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, ஒரு வள்ளலைப் போல அனைத்தையும் வாரி வழங்குவதால், இந்த கோவில் ‘வள்ளலார் கோவில்’ என்றும் பக்தர்களால் […]

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக நீடித்த போர் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டொனால்ட் டிரம்பின் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது காசாவிற்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தின் கீழ், இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் இந்த நற்செய்தியை உலகிற்கு அறிவித்தார். இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாக […]

டாஸ்மாக் மூலம் நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செங்கோட்டில் பேசிய அவர்; கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக […]

அமெரிக்காவிற்கு வெளியே ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகிள் தனது மிகப்பெரிய தரவு மையத்தை நிறுவ உள்ளது. நிறுவனம் 10 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 88,730 கோடி) முதலீடு செய்யும். இது 188,220 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு வெளியே தனது மிகப்பெரிய தரவு மையத்தை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கட்ட உள்ளது. விசாகப்பட்டினத்தில் ஒரு ஜிகாவாட் தரவு மையக் கூட்டத்தை உருவாக்க 10 பில்லியன் டாலர் […]

தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, […]

உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். அமெரிக்க நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் உலகின் பணக்கார நடிகர் யார், அவருக்கு தற்போது எவ்வளவு சொத்து உள்ளது தெரியுமா? பாலிவுட் மற்றும் ஹாலிவுட் உலகிலேயே அதிக படங்களைத் தயாரிக்கின்றன. இங்குள்ள நடிகர்கள் படங்களிலிருந்து நிறைய சம்பாதிக்கிறார்கள். உலகின் அதிக விலை கொண்ட நடிகர் எந்தத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர் தெரியுமா? ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2025 […]

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அமைந்துள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் நான்காவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாகமலைக் குன்று செழிப்பான மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி, வறண்ட புல்வெளி, நன்னீர் சுனை எனச் செழிப்பான வாழ்விடங்களை கொண்டுள்ளது. நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் இதுவரை 118 வகையான பறவைகள், […]