கடந்த மாதம், சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த, ஜூலை-நவம்பரில் தக்காளி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தக்காளி விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளியின் சராசரி சில்லறை விலை ஜூன் மாதத்தில் 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை அடிப்படையிலும், அதே காலகட்டத்தில் தக்காளி விலை 45.3 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று பாங்க் ஆப் பரோடாவின் […]

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும். […]

கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்போதும் நல்லது. விடுமுறை நாட்களில் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடையலாம். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் உங்கள் பரிவர்த்தனையை முடிக்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், வங்கி விடுமுறைக்கு நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை திட்டமிடப்பட்டிருந்தால், நீங்கள் அதை மீண்டும் திட்டமிட வேண்டியிருக்கும். விடுமுறை நாட்களில் […]

பிரிட்டிஷின் கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லி சொகுசு கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதிக விலை கொண்ட சொகுசு கார்களை தயார் செய்வதில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் மிகவும் விலை கொண்ட சொகுசு கார் Bentley mulsanne EWB Centenary edition ஆகும். இந்த கார் அண்மையில் பெங்களூருவில் காணப்பட்டது. இந்த காரின் விலை 14 கோடி ரூபாய் என்று […]

2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சேவை வழங்கலுக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார  பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முக  அங்கீகாரப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்வது இது தொடர்ந்து இரண்டாவது மாதமாகும். முக அங்கீகரிப்பு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மேல்நோக்கி சென்றவண்ணம் உள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகும். இந்திய தனித்துவ அடையாள  ஆணையத்தால், உள்நாட்டில்  உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, எம்எல்  அடிப்படையிலான முக  அங்கீகார தீர்வு, இப்போது மாநில அரசு துறைகள், மத்திய அரசில்  உள்ள அமைச்சகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட 47நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிது.  ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளைப் பதிவு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது;  பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்குவதற்காகவும். பல அரசுத் துறைகளில் ஊழியர்களின் வருகையைக் குறிக்கவும், சில முன்னணி வங்கிகளில் தங்கள் வணிக நிருபர்கள் மூலம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் கொடுக்கப்பட்டது வருமானவரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே போல 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான […]

சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ஆதார் – பான் இணைப்பு : ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 ஆகும். இணைக்காதவர்களின் பான் எண் இன்று முதல் […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின்‌ விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம்‌ ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில்‌ தவணைக்கு ரூ. 2000/- வீதம்‌ ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. PM KISSAN திட்டத்தில்‌ காஞ்சிபுரம்‌ […]

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் […]

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]