சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 16) சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,336-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதம் 4ஆம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் […]

2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 60.29 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2022 மே மாதத்தைவிட 5.99 சதவீதம் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இற்குமதி 7.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 மே மாதத்தைவிட 7.45 சதவீதம் குறைவு என்பதைக் காட்டுகிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மதிப்பீடு ஏற்கனவே ஒரு […]

அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் […]

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்தது.இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் முதல் புதன் வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் நேற்றும் இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் […]

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 […]

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக […]

துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் எவ்வித அளவு கட்டுப்பாடுமின்றி இந்த பருப்புகளை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் […]