பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. உயர்நிலை டெபிட் கார்டுக்கான அதிகபட்ச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விரைவில் மாற்றுவதாக வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, வாடிக்கையாளர் […]

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது […]

பணம் செலுத்த ஆதார் அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா..? ஆம் எனில், டிசம்பர் 1, 2022 முதல் இந்தச் சேவையைப் பெறுவதற்குக் கட்டணமாக நீங்கள் அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை அல்லது AePS அமைப்பு, உங்கள் ஆதார் எண் மூலம் முழு வங்கிச் சேவையையும் மேற்கொள்ளலாம். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மட்டுமே இந்தச் சேவையைப் பெற முடியும். ஒரு நபர் தனது வைப்பு தொகை, […]

எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. எப்படி அனுப்புவது…? ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் […]

2023 ஜனவரி முதல் சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது; எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன் முறையாக தமிழகத்தில் சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட […]

அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பந்த் வாபஸ் பெறப்பட்டது. வங்கி ஊழியர் சங்கம் நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த அழைப்பை வாபஸ் பெற்றதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகளுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டதன் காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஐபிஏ மற்றும் வங்கிகள் இருதரப்பு பிரச்சினையை தீர்க்க ஒப்புக் கொண்டுள்ளன. எனவே எங்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் […]

நவம்பர் 15-ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 21-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. நவம்பர் 15-ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 21-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, […]

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பரவலாக எழுந்து வந்தது. அதன் பின்னே இதனால் […]

2022 செப்டம்பர் மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரித்துறையில் கனிம உற்பத்தி குறியீடு 99.5 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும். இந்திய கனிம துறையின் தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 2022-23 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் அதே கால கட்டத்தை விட 4.2 சதவீதமாகும். செப்டம்பர் 2022-ல் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்களின் உற்பத்தி வருமாறு […]