இந்தியாவிற்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கும் இடையே முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு எந்த வரிச் சலுகைகளையும் வழங்க இந்தியா தயாராக இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான முந்தைய வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விலைமதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகம் குறித்து […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இன்றைய நவீன உலகில், மனிதர்களின் ஆறாவது விரலாகவே ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் தவழும் இந்த மின்னணு சாதனம், ஒரு அத்தியாவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஒரு புதிய போனை வாங்கும் விஷயத்தில் நம்மில் பலரும் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், சந்தையில் எது பிரபலமாக இருக்கிறதோ அல்லது எது புதிதாக அறிமுகமாகிறதோ அதை உடனே வாங்கிவிடுவதுதான். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பணத்தை விரயம் […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை சார்ந்து இல்லாமல், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதற்கு இந்த புதிய புள்ளிவிவரங்களே சாட்சி. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர். ‘டாலர் […]

இன்றைய தலைமுறை இளைஞர்களின் மிகப்பெரிய கனவு, அறுபது வயது வரை ஓயாமல் உழைக்காமல், சீக்கிரமே ‘நிதி சுதந்திரத்தை’ (Financial Freedom) அடைந்து நிம்மதியாக ஓய்வெடுப்பதுதான். இதற்காக பலரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைத் தேடி வரும் நிலையில், ’20-20 முதலீட்டுத் திட்டம்’ என்பது ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுகள் பொறுமையுடன் முதலீடு செய்து, அடுத்த 20 ஆண்டுகள் கைநிறைய வருமானத்தைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஒரு […]

இந்திய வங்கித் துறையில் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, உடனடி பணப் பரிமாற்ற முறையான ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் பான் கார்டு (PAN Card) தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு கட்டங்களாக அமலுக்கு வர உள்ளன. முதற்கட்டமாக, […]

அவசர பணத்தேவை என்றதும் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை முதலில் நாடுவது தங்கக் கடன் முறையைத்தான். ஆனால், விலைமதிப்பற்ற மற்றுமொரு உலோகமான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெற நினைத்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. தங்கத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வங்கிகள், வெள்ளி நகைகளைப் பெற தயங்குவது ஏன் என்பதற்குப் பின்னால் வலுவான சில பொருளாதார மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. இதற்கு முதன்மையான […]

உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமல்ல, வரலாறையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 850 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி.. இதன் மூலம், 800 பில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை மஸ்க் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த 25 ஆண்டுகால நிதிச் சந்தையில் பாதுகாப்பான முதலீட்டு அரணாக திகழும் தங்கம், 2025-இன் தொடக்கத்திலிருந்து சுமார் 90% விலை உயர்வை சந்தித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிர்பாராத திருப்பமாக, 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) சரிந்து ரூ. 1,56,200 என்ற நிலைக்கு கீழ் இறங்கியது. இந்தச் சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் (பிப்ரவரி […]