தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, பின்னர் சரிந்து மீண்டும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலைமை சாமானிய மக்களை மட்டுமல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) எதிர்பார்ப்புகளையும் பாதித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வை, தனது பணவீக்க எதிர்பார்ப்புகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமீபத்திய விலை அழுத்தங்கள் மத்திய வங்கியின் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறுதி விரி விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார். இந்தியா–அமெரிக்கா உறவுகளில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியப் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள், சிறிய அளவிலான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ரிசர்வ் வங்கியின்படி, சிறிய மோசடி வழக்குகளுக்காக ஒரு புதிய இழப்பீட்டு கட்டமைப்பை அது உருவாக்கியுள்ளது. சுமார் 65 சதவீத மோசடி வழக்குகள் ரூ. 50,000-க்கும் குறைவான தொகைக்கானவை என்று மத்திய வங்கி கண்டறிந்துள்ளது. “சிறிய மோசடிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான […]
நீங்கள் சம்பாதிப்பதில் கணிசமான பகுதியைச் சேமிக்க வேண்டும் என்று நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். நாம் செய்யும் சிறிய முதலீடுகள் நீண்ட காலத்திற்குப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரும். இப்போது, அத்தகைய சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான PPF பற்றி அறிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இது அஞ்சல் அலுவலகங்களிலும், சில வங்கிகளிலும் கிடைக்கிறது. பாதுகாப்பு, […]
சில இந்திய ரூபாய் நோட்டுகள் சேகரிப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து பெரும் ஆர்வத்தை ஈர்க்கின்றன.. இந்த ரூபாய் நோட்டுகள், சில சமயங்களில் லட்சக்கணக்கில் விலையைப் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட அரிய ரூ.10 நோட்டு ஆன்லைனில் ஒரு மதிப்புமிக்க பொருளாக மாறியுள்ளது, உங்களிடம் அப்படி ஒன்று இருந்தால், நீங்கள் எதிர்பாராத ஒரு பெரிய தொகையைப் பெறக்கூடும். சில 10 ரூபாய் நோட்டுகள் ஏன் அதிக தேவைப்படுகின்றன? ஒவ்வொரு ரூ. […]
சிறு வணிகர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதுவரை, அவர்களுக்குப் பிணையம் இல்லாத கடனாக ரூ. 10 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த வரம்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சமீபத்தில் முடிவு செய்துள்ளது. விவரங்களைப் பார்ப்போம்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிறு வணிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இதுவரை அவர்களுக்குப் பிணையம் இல்லாமல் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
60 வயதைக் கடந்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது? சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான வருமானத்தை எப்படிப் பெறுவது? என்று யோசிக்கிறீர்களா? பங்குச் சந்தை வர்த்தகம் போன்ற அபாயகரமான வழிகளை விட, அஞ்சல் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, முதுமையில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கூட. யார் தகுதியானவர்கள்? […]
ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

