11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1,00,000, கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படவுள்ளது. தமிழக அரசுப் குழந்தைகள் பணியாளர்களின் கல்வியில் உயர் சேர்வதற்கான முன்பணத்தை அரசு வழங்கி வருகின்றது. அதில், […]
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு, “ஜெகன் மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி […]
திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிப் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் […]
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவான […]
பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தை துவக்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற 15 எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம் இன்றும் மற்றும் நாளையும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடந்தும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு […]