2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையம் அருகே உள்ள பணிமனடையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. பெட்டிகளை இணைப்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் […]

டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.. அதன்படி, 10 ரூபாய் கூடுதலாக கொடுத்த மதுபான பாட்டில் வாங்கிவிட்டு காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலி மது பாட்டிலகளை […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞ்சர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கனிமொழிக்கு பிறந்த்நாள் வாழ்த்து […]

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது தவிர, இலங்கை தமிழர் மறுவாழ்வு […]

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாக நம்ப வைத்து மருமகளை மாமியார் கழுத்தறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29) என்ற பெண், தனது முதல் கணவர் மறைவுக்கு பிறகு மரிய ரொசாரியோ என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து 2-வதாக திருமணம் செய்துகொண்டதே இந்த கொலைக்கு காரணமாக மாறியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத மாமியார் கிறிஸ்தோப்மேரி (55), தனது குடும்ப கௌரவம் […]

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டை […]

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரப்பதிவுப் பணிகள் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலப் பத்திரப்பதிவுத் துறையின் மைய தரவு சேமிப்பு வன்பொருளில் (Server Hardware) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்வது, வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மற்றும் சொத்துப் பரிமாற்ற பதிவுகள் […]