தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பொது பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண் பட்ஜெட் இரண்டும் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன.. அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.. இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது.. அப்போது […]

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் […]

மத்திய மாநில உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலை குழுவின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.. அப்போது உரையாற்றிய அவர் “ மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திமுக ஏற்றுள்ளது. மத்திய மாநில அரசின் உறவு குறித்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம்.. நிதி உரிமைக்காக இன்னனும் போராட வேண்டிய நிலை தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் மத்திய அரசு […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் அடுத்த ரெட்டி குப்பம் பகுதியில், அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பார்த்திபன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவலின்படி, பார்த்திபனின் மனைவி ஜமுனாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த சுசில் என்பவருக்கும் இடையே […]

தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” மீண்டும் ஒரு பிளவை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த அணியின் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து முற்றிலுமாக விலகி, “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஓபிஎஸ் அணியை […]

தமிழகத்தின் ஆன்மீக மரபில் நீர் நிலைகளுக்கும், வழிபாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை பறைசாற்றும் உன்னதமான திருவிழா ‘மாசி மகம்’. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நன்னாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக ஆற்றல் பெருகி காணப்படும் நாளாக கருதப்படும் இந்நாளில், பெரும்பாலான ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் நீர் நிலைகளுக்கு […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் […]