சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியியிருந்தார்.. மேலும் “ தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித  கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான  அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த […]

தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.. இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் […]

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் “ 2026-ல் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.. தனது பொது வாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர்.. இளைஞர்களுக்கு நல்வழிக்காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள் பாராட்டுகள். கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் மற்றும் படகுப் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதுடன், அவற்றைப் பின்னாளில் அந்நாட்டு அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளன. குறிப்பாக, கடந்த மாதம் […]

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் கைகளில் புத்தகம் ஏந்த வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் […]

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி 150 கி.மீ தொலைவில் வீசியெறிந்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியில் வசித்து வந்த தேவா (எ) ரித்தீஷ் (27) என்ற கூலித்தொழிலாளி, கடந்த டிசம்பர் 26 முதல் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் […]

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கிய பழைய நிர்வாகிகளுக்கும், தற்போதைய தலைமைக்கும் இடையிலான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் முற்றுகையிடப்பட்ட சம்பவம், தவெக-வின் உட்கட்சிப் பூசலை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. வெள்ளக்கோவிலில் நகர அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த செங்கோட்டையனை, விஜய் மக்கள் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக […]

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாகப் பயணித்து வரும் நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஒருபுறம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் விஜய் மும்முரம் காட்டி வரும் வேளையில், அவர் மீதான விமர்சனங்களும் அரசியல் தளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம் என திமுக தலைமை கருதினாலும், தமிழகத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் […]