தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற […]
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், 25 நாட்களில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி வரை www.tneaonline.org-ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் […]
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26ஆம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் […]
தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, […]
என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் 42 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண். இவர், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஓராண்டுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தோம். திடீரென ஒருநாள் என் மீது சந்தேகம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் நீ யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்றும் […]
கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறையும், காவல்துறையும் தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையே காதலிக்கு சில இளைஞர்கள் கர்ப்பமாக்கி போக்சோ வழக்கில் சிக்கியுள்ளனர். அதேபோல், பள்ளி – கல்லூரிகளிலும் படிக்கும் மாணவிகளை […]
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கின்றனர். அஜித் குமார், சினிமா மட்டுமின்றி, கார் பந்தயங்களிலும் பங்கு பெற்று வெற்றி பெற்று வருகிறார். இவர், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்றுள்ள கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற […]