சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை மாநகர கவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் நரசோதிபட்டியில் உள்ள கார்த்தி நகரைச் சேர்ந்த ஆர். மோகன்ராஜ் (43), ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், அவரது நிறுவன அதிகாரிகள், மோகன்ராஜ் மீது, நிறுவனத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஷெவாப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வெள்ளிக்கிழமை போலீசார் அவரைக் கைது செய்து, அவரது மொபைல் போனைப் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக பயணம் ஜூலை 18-ம் தேதி தொடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான அம்மன் கோவில்களுக்கு அரசே உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களை ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம், ஜூலை […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 10ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி சரிதா, 16 வயது மகன் வெற்றிமாறனை வளர்த்து வந்தார். ஆம்பூர் பகுதியிலுள்ள அரசு […]
சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]
அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]
வரும் ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்; பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் […]
ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் […]
RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த […]
சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பானுமதி என்பவரிடம் இணையவழியில் ரூ.84.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்தவொரு நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டார். இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை […]

